High Court Jobs : சட்டம் படித்தவரா நீங்கள்? சென்னை, உயர் நீதிமன்றத்தில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது ?
Madras High Court Recruitment 2024 : சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் 22-ம் தேதி வெளியானது. இப்பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் மற்றும் பணி விவரங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
Madras High Court Recruitment 2024 of Research Law Assistant : சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் உள்ள 30 ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு தான் அது. 1 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
---|---|
ஆராய்ச்சி சட்ட உதவியாளர் | 30 |
வயது வரம்பு :
ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணிக்கு ஜனவரி 1 அல்லது ஜூலை 1-ம் தேதி வரை 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது.
கல்வித்தகுதி :
இப்பதவிக்கு விண்ணப்பிக்க 10+2+3+3, 10+2+5, 10+2+4+3 ஆகிய விதத்தில் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கீழ் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர் இல்லாமல் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய பார் கவுன்சில் மூலம் வழக்கறிஞர் என்பதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.
பணி தன்மை :
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு கீழ் ராய்ச்சி சட்ட உதவியாளர்கள் பணியாற்ற வேண்டும். வழக்கிற்கான உதவி முதல் நிர்வாக பணிகளிலும் உதவியாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு https://hcmadras.tn.gov.in/ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் கொண்டுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இமெயில் முகவரியிலும் அனுப்பி வைக்க வேண்டும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு குழுவின் மூலம் நடத்தப்படும் viva voce தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் முறை குறித்து தேர்வு குழுவே முடிவெடுக்கும்
முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
---|---|
விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.11.2024 |
தேர்வு முறை | பின்னர் அறிவிக்கப்படும் |
சட்டம் படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணிபுரியலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள் படி விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Chennai – 600104.
Email: mhclawclerkrec@gmail.com.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
0 கருத்துகள்